அமமுக வேட்பாளர்களுக்கு வரவேற்பு : கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக சூளுரை
Mar 18 2019 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கழக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக சூளுரைத்துள்ளனர்.
நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 24 பேர் இடம் பெற்றுள்ள, முதற்கட்டப் பட்டியலை, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் நேற்று வெளியிட்டார். சட்டமன்ற இடைத்தேர்தலில் முதற்கட்டமாக 9 தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களையும் அறிவித்தார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வீரபாண்டி திரு.எஸ்.கே. செல்வம் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே
நடைபெற்ற அறிமுக விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் தொண்டர்கள் வேட்பாளரை வாழ்த்தி ஆதரவு தெரிவித்தனர். மேலும் சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டைமாரியம்மன் திருக்கோயிலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி, சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் திரு.வெங்கடாசலம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உட்பட மகளிர் அணியினர் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.