விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் பா. ராஜேஷ்கண்ணனின் மறைவுக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
Mar 19 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் திரு. பா. ராஜேஷ்கண்ணனின் மறைவுக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் திரு. பா. ராஜேஷ்கண்ணன் சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்திகேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
திரு. ராஜேஷ்கண்ணனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைபிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.