கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், பல்வேறு அமைப்பினர் - பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய தொண்டர்கள் சந்திப்பு
Mar 18 2019 6:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, பல்வேறு அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய தொண்டர்கள் ஏராளமானோர் சந்தித்தனர்.
சென்னை அடையாறு இல்லத்தில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணியை சேர்ந்த, முன்னாள் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மாரிமுத்து நேரில் சந்தித்து, கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.பி.வெற்றிவேல் உடனிருந்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் "மக்கள் தேசிய தீ கட்சியினர்" அமமுக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதுடன், தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக களப்பணியாற்ற உள்ளதாக, கழக துணை பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை சந்தித்து, தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி.வெற்றிவேல் உடனிருந்தார்.