கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுடன் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு
Mar 19 2019 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும், பொதுமக்களும் தங்களின் பேராதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில், கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரனை, வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு, குறு விவசாயிகள் நலச்சங்க தலைவர் திரு.தயா.பேரின்பம் மற்றும் அச்சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, வரும் நாடாளுமன்றம் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களின் முழு ஆதரவை அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.V.Tகலைச்செல்வன் உடனிருந்தார்.