பொள்ளாட்சி பாலியல் விவகாரம் - வலுக்கும் எதிர்ப்பு : கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
Mar 19 2019 12:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாட்சி பாலியல் விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்து சம்மந்தபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என கோரி, சென்னைபரம் அடுத்த பல்லாவரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் திரு. சலீம்கான் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், 200க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கண்டித்து திண்டுக்கல்லில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும், மெத்தன போக்காக செயல்படும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், தமிழக அரசை கண்டித்தும், தமிழக காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை போராட்டம் தொடரும் என்றும் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.