தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை : உரிய ஆவணங்கள் இல்லாத துப்பாக்கி, பணம் பறிமுதல்

Mar 19 2019 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத துப்பாக்கி, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர், மூன்று குழுக்களாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பெருமாள்மலையில் இருந்து பழனி பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செய்த போது, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டபோது, மெய்யனம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் வாகனத்தை சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 2 லட்சத்து 41ஆயிரத்து 350ரூபாய் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த நெல் வியாபாரி சந்திரகுமார் என்பவரிடம் சோதனை செய்த போது, முறையான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காத்தான்சாவடி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஆத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் காரை சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணை பிரிவில் தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் நடத்திய வாகன சோதனையில், சத்தியமங்கலத்திலிருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வந்த சொகுசு காரில், ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 3 லட்சத்து 2 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணத்தை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை மேற்கொண்ட போது, ராஜ்குமார் என்பவர் உரிமம் இல்லாத கைத் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, துப்பாக்கியை பறிமுதல் செய்த அதிகாரிகள் ராஜ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00