பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்‍கக்‍கோரிய வழக்‍கு - ஏப்ரல் 10ம் தேதிக்‍குள் பதிலளிக்‍க தமிழக அரசுக்‍கும், சி.பி.ஐ.க்‍கும் நோட்டீஸ்

Mar 19 2019 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை, உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்‍கில், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையிலும், அவரது சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையிலும் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி, தமிழக அரசு, கடந்த 13ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதனையடுத்து, சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கக்‍கோரி புகழேந்தி என்ற வழக்‍கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்‍கல் செய்தார். மனுவில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை அரசாணையில் குறிப்பிட்டது, மற்ற பெண்களை புகார் அளிக்க விடாமல், மிரட்டும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி திருமதி தஹில்ரமானி, நீதிபதி திரு.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. விசாரணையை, உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய மனுவுக்கு, ஏப்ரல் 10ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00