அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய SDPI கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் தீவிரம்
Mar 21 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்ய, SDPI கட்சி நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. முட்டுக்காடு முனுசாமியை ஆதரித்து, மாமல்லபுரம் அடுத்த புதுப்பட்டினத்தில் SDPI கட்சி சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. எம். கோதண்டபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் SDPI காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் கிண்டி திரு. அன்சாரி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு. அப்துல் நபில், மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. ஜி. கே. பாபு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கழக வேட்பாளர் திரு. முட்டுக்காடு முனுசாமியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் SDPI கட்சி சார்பில் நெல்லை நாடாளுமன்ற தேர்தல் பணிகுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு SDPI கட்சி நகர தலைவர் திரு. ஹாலித் தலைமை தாங்கினார். கட்சியின் தேர்தல் பணிக்குழு தலைவர் திரு. எஸ்.எஸ்.எ. கனி மாவட்ட பொருளாளர் திரு. களந்தை மீராஷா, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பணிக்குழு தலைவர் திரு. இம்ரான் அலி நகர செயலாளர் திரு. பீமாஸ் ஹுசைன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேர்தலில் கட்சியின் முன்னணி அமைப்புகளான சோசியல் டெமாக்ரடிக் டிரேடிங் யூனியன், விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட், மருத்துவ சேவை அணி, வர்த்தகர் அணி, விவசாய அணி வழக்கறிஞர் அணி, உள்ளிட்ட அணிகளை தேர்தல் களத்தில் ஈடுபடுத்தி அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு. ஞானஅருள்மணியை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது என தீர்மானிக்கபட்டது.
ஈரோடு நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. செந்தில் குமாருக்கு, கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், கழக வேட்பாளர் திரு. செந்தில் குமாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கழக வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய அயராது பாடபட வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதி மொழி எடுத்தனர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் திரு. உசேன் அலி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.