அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
Mar 21 2019 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணன், தொகுதிக்குட்பட்ட தாம்பரம் ரயில்வே காலனியில் உள்ள விளையாட்டு மைதானம், பூண்டி பஜார் காந்தி பூங்கா ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்தார். இதில் தாம்பரம் நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி கழக வேட்பாளர் முட்டுக்காடு முனுசாமிக்கு, அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் பொதுமக்கள் ஆதரவு தந்து வருகின்றனர். மாமல்லபுரம், திருப்போரூர் பகுதியில் உள்ள வியாபாரிகள், அரசு, ஊழியர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளி இயக்கத்தினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட ஏராளமானோர் ஆதரவு அளித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆதம்பாக்கத்தில், வேட்பாளர் அறிமுகக் கூட்டம், மாவட்ட கழக செயலாளர் திரு. மா. கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் தாம்பரம் நாராயணன், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வைப்பது குறித்து கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலந்தூர் பகுதி கழகச் செயலாளர் ஏன் லட்சுமிபதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. வ.து.ந. ஆனந்த், பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் முத்தையா ஆகியோர் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் முருகன் கமுதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.