தேர்தல் பிரசாரத்தின்போது பொள்ளாச்சி சம்பவம் குறித்து மாணவி சரமாரி கேள்வி - பதிலளிக்க முடியாமல் ஓட்டம்பிடித்த ஓ.பி.எஸ்.
Mar 21 2019 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஓ.பி.எஸ்-ஐ வழிமறித்து, பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கல்லூரி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ்சின் மகன் ரவீந்தரநாத், மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் ஓபிஎஸ் உடன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தேர்தல் விதிகளை மீறி ஏராளமான வாகனங்களில் வருகை தந்ததோடு, ரவிந்தரநாத் மீது பூக்களை தூவுவதற்காக, பெண்கள் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டிருந்தனர். மேலும், போலீசார் முன்னிலையிலேயே வாக்காளர்களுக்கு 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. ஓபிஎஸ்சின் மற்றொரு மகனான பிரதீப், தனது காரில் கொண்டுவந்த பணத்தை விநியோகம் செய்தார். பெயர் அளவிற்கு கூட தேர்தல் பறக்கும்படையினரோ அதிகாரிகளோ இது குறித்து கண்டுகொள்ளவில்லை. ஓபிஎஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தபோது, அவரை வழிமறித்த கல்லூரி மாணவி ஒருவர்," நீங்கள் துணை முதல்வர் தானே பொள்ளாச்சி விவகாரத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்" என நேருக்கு நேராக கேள்வி எழுப்பினார். இதனை எதிர்பார்க்காத ஓபிஎஸ், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதாக பதிலளித்து விட்டு புறப்பட்டு சென்றார்.