தமிழகம், புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு - காலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள்
Apr 18 2019 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்காக அமைக்கப்பட்ட மையங்களில் வாக்குப்பதிவு தொடக்கத்திலிருந்தே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.
குறிப்பாக பெண்கள், முதல் தலைமுறையினர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.