தமிழகத்தின் முன்னணி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு - ஜனநாயக கடமை ஆற்றிய தேசிய தலைவர்கள்
Apr 18 2019 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் முன்னணி தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை குரோம்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரையா தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. நல்லகண்ணு, சிஐடி நகர் அரசுப் பள்ளியிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் திரு. டி.ராஜா தி.நகரில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளியிலும் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. கே. பாலகிருஷ்ணன் சிதம்பரத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த், அக்கட்சியின் பொருளாளர் திருமதி. பிரேமலதா, மகன்கள் திரு. விஜய பிரபாகரன், திரு. சண்முக பாண்டியன் ஆகியோர் வாக்களித்தனர்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவுசெய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப. சிதம்பரம் காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் உள்ள டி.இ.எல்.சி பள்ளியில், காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.மணிசங்கர் அய்யர் தனது வாக்கை பதிவு செய்தார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி, தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பா.ஜ.க.வை இந்த தேர்தலில் மக்கள் முடிவுக்குக் கொண்டுவருவார் என அவர் தெரிவித்தார்.