தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற-சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு - 70 சதவீதம் வரை வாக்குகள் பதிவானதாக தகவல்
Apr 18 2019 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் மாலை 5 மணி வரை 63 புள்ளி ஏழு மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மாலை 5 மணி அளவில் 63 புள்ளி ஏழு மூன்று வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொருத்தவரை 67 புள்ளி பூஜ்ஜியம் எட்டு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக
ஆம்பூரில் 50 புள்ளி ஏழு நான்கு சதவிதமும், குறைந்தபட்சம் பெரியகுளத்தில் 32 புள்ளி மூன்று மூன்று சதவீதமும் பதிவாகி உள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் 55 சதவீதமும், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி 47 சதவீதமும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 51 புள்ளி ஐந்து, எட்டு சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் 48 சதவீதமும், கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 56 புள்ளி எட்டு ஐந்து சதவீதமும், திண்டுக்கல் தொகுதியில் 54 புள்ளி முன்று சதவீதமும் பதிவாகியுள்ளது. இதேபோன்று தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 47 சதவீதமும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 45 புள்ளி ஆறு சதவீதமும், வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 48 புள்ளி 53 சதவீதமும் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் 60 புள்ளி 3 சதவீதமும், தட்டாஞ்சாவடியில் 56 புள்ளி ஏழு ஐந்து சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.