சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி : சொந்த ஊர்களில் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்
Apr 19 2019 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் தங்கள் ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகினர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ளவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். எனினும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 100 சதவீத வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் இலக்கிற்கு தடை ஏற்படுத்தவே, அரசு இதுபோன்று பேருந்துகளை இயக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பேருந்து கிடைக்காமல் பொதுமக்கள் தொடர்ந்து கடும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று மாலையிலும், மக்கள், பேருந்துக்கு முண்டியடித்து ஏறிய அவல காட்சிகள் அரங்கேறின.