ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியீடு - 91 புள்ளி 3 சதவீதம் மாணவ-மாணவியர் தேர்ச்சி
Apr 19 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 7 ஆயிரத்து 82 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் மாணவர்கள் கடந்த மாதம், பிளஸ் 2 தேர்வை எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிவடைந்ததை அடுத்து, இன்று காலை முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதில் தமிழகத்தில், 91 புள்ளி 3 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93 புள்ளி ஆறு நான்கு சதவிகிதமும், மாணவர்கள் 88 புள்ளி ஐந்து ஏழு சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் 95 புள்ளி மூன்று ஏழு சதவிகிதம் பெற்று திருப்பூர் முதலிடமும், 95 புள்ளி இரண்டு மூன்று சதவிகிதம் பெற்று ஈரோடு இரண்டாம் இடமும், 95 புள்ளி ஒன்று ஐந்து சதவிகிதம் பெற்று பெரம்பலூர் மூன்றாவது இடமும் பெற்றுள்னன. மாணவர்களை விட மாணவிகள் 5 புள்ளி பூஜ்ஜியம் ஏழு சதவிகிதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.