ப.சிவந்தி ஆதித்தன் நினைவுதினம் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் மலரஞ்சலி
Apr 19 2019 4:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தினத்தந்தி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனின் 6வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், கழக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனின் 6வது ஆண்டு நினைவு தினமான இன்று, சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.P.வெற்றி வேல், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வ.சுகுமார் பாபு, வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.P.சந்தான கிருஷ்ணன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் திரு.சேப்பாக்கம் ராஜேந்திரன், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் திரு.பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் திரு. பாலசுப்ரமணியன், தினத்தந்தி குழும நிர்வாகிகள் திரு.சிவந்தி ஆதித்தன், திரு.ஆதவன் ஆதித்தன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.