அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரானார் டிடிவி தினகரன் - சென்னையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்வு
Apr 23 2019 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக திரு. டிடிவி தினகரன் இன்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அசோக்நகரில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தலைமைக் கழக அலுவலகத்தில் இன்று மாநில மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், திரு. டிடிவி தினகரன், கழகப் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அ.ம.மு.க.வை, ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்றும் இதில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கழக செய்தித் தொடர்பாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, இதுகுறித்த விவரங்களை தெரிவித்தார்.