அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு
Apr 23 2019 12:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த திரு. டிடிவி தினகரன் அண்மையில் பொதுச் செயலாளராக பதவியேற்றார். இதையடுத்து, ஒரு அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த அ.ம.மு.க., அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். அதன்படி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முறைப்படி இன்று தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. திரு. டிடிவி தினகரன் சார்பில், மூத்த வழக்கறிஞர் திரு. ராஜா செந்தூர் பாண்டியன், மனுவை, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தார்.