ப்ளஸ் டூ தேர்வு மறுமதிப்பீட்டுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் : அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Apr 22 2019 3:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப்ளஸ் டூ தேர்வு மறுமதிப்பீட்டுக்கு, இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள், கடந்த 19-ம் தேதி வெளியாகின. இதில், மாணவர்கள் அல்லது தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண்கள் குறைந்து விட்டதாகக் கருதினால், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும், மறுகூட்டல் செய்யவும் வழிகாட்டுதலை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும் கட்டணமாக 275 ரூபாய் செலுத்த வேண்டும். மறுகூட்டல் செய்ய விரும்புவோர், உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும், இன்றுமுதல் வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.