மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டம் : விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு
Apr 24 2019 4:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மங்களூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் கடந்த ஒருவாரமாக குடிநீர் தட்டுபாட்டை ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மங்களூர், ஆவட்டி சாலையில் பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் அக்கா நாயக்கன்பட்டி கிராமத்தில் இடையன்குளம் கண்மாய் ஒன்று உள்ளது. இந்த நீர் ஆதாரத்தை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள், விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் ஒன்று எந்த வித அனுமதியும் பெறாமல் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மின் கம்பங்களை உடனடியாக அகற்ற கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தியில் புதிதாக அமைய உள்ள புதிய அரசு, சில்லரை வணிகத்தினை காப்பாற்றவில்லை என்றாம் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் திரு.வெள்ளையன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சுதேசி பொருளாதாரத்தை சீரழிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த நாகரசாம்பட்டி கிராமத்திற்கு கடந்த பல மாதங்களாக சரி வர தண்ணீர் வழங்காமலும், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டதாலும், குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பல முறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்க கோரி கிருஷ்ணகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.