தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்ச்சி - கூட்டத்தில் பங்கேற்க 500 பேருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்
May 15 2019 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவுறவுள்ள நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் சார்பில் நினைவஞ்சலி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததபோது, மே 22-ம் தேதி நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அந்த கூட்டத்தில், 250 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனையடுத்து, நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க 500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.