மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் போது முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் : தேர்தல் ஆணையம் விளக்கம்
May 22 2019 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியின் போது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளதாக வெளியான தகவலில், தமிழகத்தில், மொத்தம் 45 வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியின்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள், கூர்மையான பொருள்களோ, மொபைல் போன்களோ எடுத்துச் செல்ல அனுமதியில்லை என்றும், அதற்கு மாற்றாக பென்சில், பேப்பர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமதிக்கப்படுவர் - ஒரு மேசைக்கு ஒரு முகவர் என்ற வீதத்தில், 14 முகவர்கள், ஒரு தலைமை முகவர் மற்றும் ஒரு கணக்காளர் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையத்தை விட்டு முகவர் வெளியேறினால், மீண்டும் அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.