திருச்சி மாவட்டம் முசிறியில் 5 வயது சிறுமி சரியாகப் படிக்கவில்லை எனக்கூறி தாயார் அடித்ததில் உயிரிழந்த சம்பவத்தால் அதிர்ச்சி

May 21 2019 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம், முசிறியில் 5 வயது சிறுமி, சரியாகப் படிக்‍கவில்லை எனக்‍ கூறி தாயார் அடித்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசிறியை அடுத்த காட்டுப்புத்தூரில் வசித்து வரும் பாண்டியன் - நித்யகமலா தம்பதிக்கு, 5 வயதில் லத்திகாஸ்ரீ் என்ற பெண் குழந்தை இருந்தது. சரியாக படிக்கவில்லை எனக்கூறி அவரது தாய், அச்சிறுமியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சிறுமிக்கு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, பின்னர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியையாக பணியாற்றும் நித்யகமலாவின் இந்த செயல் பொதுமக்‍களிடையே கடும் கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00