சென்னை மெரினா கடற்கரையில் 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி பலி
May 22 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மெரினா கடற்கரையில், 7 வயது சிறுவன் ராட்டினத்தில் சிக்கி, தலை சிதறி பலியான சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த, பத்மநாபன் - முத்துலஷ்மி தம்பதியினர், சென்னை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் எதிரேயுள்ள கடற்கரை மணல் பகுதியில், பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது 7 வயது மகன் பிரணவ் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக, ராட்டினம் மோதி தலை சிதறி, சம்பவ இடத்திலேயே சிறுவன் பிரணவ் உயிரிழந்தான்.
இச்சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவுச்செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.