வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறையை தடுக்க நடவடிக்கை தேவை : நடுநிலையோடு வாக்கு எண்ணிக்கை நடத்திட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் வலியுறுத்தல்
May 22 2019 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஆட்சியை இழந்துவிடுவோம் என்ற உளவுத்துறை தகவலின் காரணமாக வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 23ம் தேதி வன்முறையை கட்டவிழ்த்துவிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனால் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு, மத்திய ரிசர்வ் படை மற்றும் துணை ராணுவப்படையை கூடுதலாக பணியில் ஈடுபடுத்தி, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இல்லாமல் நடுநிலையாக செயல்பட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், வடசென்னை வடக்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு.P. வெற்றிவேல், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகுவிடம் மனு அளித்துள்ளார்.