எல்.இ.டி விளக்குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழல் - பதவி நீக்கக்கோரி ஆளுநர் மற்றும் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் எம்.எல்.ஏ. புகார்
May 22 2019 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊராட்சிமுதல் மாநகராட்சி வரை எல்.இ.டி விளக்குகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, ஆயிரத்து 811 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக, முன்னாள் எம்.எல்.ஏ., தமிழக ஆளுநரிடமும், தலைமைத் தேர்தல் அதிகாரியிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர், அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.