சென்னையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது 5 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்
May 22 2019 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் வாக்கு எண்ணும் தினமான நாளை, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பிற்கும், வாக்கு எண்ணும் மையத்திற்கும்
ஐந்தாயிரம் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.