தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் - முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மொபைல் ஆப் வசதி : தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
May 22 2019 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், வாக்கு எண்ணிக்கை முழுவதும் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தேர்தல் ஆணையத்தின் மொபைல் ஆப் மூலம் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். திருவள்ளூர் தொகுதியில் அதிகபட்சமாக 34 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.