தேனி மக்களவைத் தொகுதியில் மகனின் வெற்றிக்காக போராடிய ஓ.பி.எஸ்., ஆண்டிப்பட்டி, பெரியகுளத்தில் அ.தி.மு.க.வை தோற்க வைத்தது ஏன்? - அ.ம.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
May 24 2019 6:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி தொகுதியில் மகனை வெற்றிபெற வைப்பதில் குறியாக இருந்த ஓ.பி.எஸ்., மாண்புமிகு அம்மா வென்ற ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடித்தது ஏன்? என அ.ம.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் திரு. தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு. தங்க தமிழ்ச்செல்வன், தேனி தொகுதியில் தன் மகன் வெற்றி பெற 500 கோடி ரூபாய் வரை ஓ.பி.எஸ். செலவு செய்ததை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இனி ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்கள் தடையின்றி அமல்படுத்தப்படுவதன் மூலம் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் திரு. தங்க தமிழ்ச்செல்வன் எச்சரித்தார்.