அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாலும், தமிழகத்தில் மோடியின் தந்திரம் பலிக்காது - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து
May 24 2019 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அகில இந்திய அளவில் திரு.மோடி வெற்றி பெற்றாலும், சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபித்துவிட்டதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திரு.திருமாவளவன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட எடப்பாடி அணி வேட்பாளர் திரு.சந்திரசேகரை விட, 3 ஆயிரத்து 219 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியாளருமான விஜயலட்சுமி, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, திரு.திருமாவளவனிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, திரு.திருமாவளவன், தனது வெற்றியை தொகுதி மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் சாதிவெறி, மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை மக்கள் நிரூபித்துள்ளதாகவும், திரு.திருமாவளவன் குறிப்பிட்டார்.