மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி அணி படுதோல்வி : அரசியல் சுய லாபத்திற்காக பாரதிய ஜனதாவுடன் தி.மு.க ரகசிய பேரம் ?
May 24 2019 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி அணி படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அரசியல் சுய லாபத்திற்காக, பாரதிய ஜனதாவுடன் தி.மு.க ரகசிய பேரத்தில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் வகையில், மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா, எடப்பாடி அணி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரவிருக்கும் பாரதிய ஜனதாவுடன் திமுக ரகசிய பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே, மத்தியில் எந்தக் கட்சிக்கும் அறுதிபெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாரதிய ஜனதாவுடன் அணி சேர்வது குறித்து திமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக பாரதிய ஜனதா தலைவர்களே தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தற்போது பாரதிய ஜனதா வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலையில், அந்தக்கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கான முயற்சிகளை திமுக மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி ஆட்சியை கலைக்வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையுடன் போச்சுவாத்தையில் ஈடுப்பட்டுள்ள தி.மு.க இதற்காக அரசியல் இணைக்கத்துடன் நடத்து கொள்வதாக வாக்குறுதியை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் தி.மு.க தலைவர் திரு. ஸ்டாலின் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகும் என கூறப்படுகிறது.