தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன : மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி
May 24 2019 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடந்து முடிந்த தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்ததைவிட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக அதன் தலைவர் திரு. கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தத் தேர்தல் தோல்வியால் தாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்றும், தொடர்ந்து மக்களுக்கு தொண்டுகள் செய்வோம் என்றும் கூறினார்.