கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாற்றுத் திறனாளி மாணவரை விடுதி காப்பாளர் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி வீடியோ...
May 24 2019 4:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, மாற்றுத் திறனாளி மாணவரை விடுதி காப்பாளர் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த என்.ஜி.ஒ காலனியில் இயங்கி வரும் தனியார் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ள மாற்றுத் திறனாளி சிறுவன் மீது, விடுதி காப்பாளர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளார். தங்களை கட்டிவைத்து கல்லால் அடித்து துன்புறுத்துவதாக விடுதியில் உள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றனர். விடுதி காப்பாளர் சிறுவனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல மைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய காப்பக உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அங்குள்ள சிறுவர்களை மீட்டு விடுதிக்கு சீல் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.