சென்னையில் அங்கீகாரமில்லாமல் செயல்படும் 331 பள்ளிகள் - மாணவர்களை சேர்க்க வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Jun 19 2019 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் அங்கீகாரமில்லாமல் 331 பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், இந்தப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்றும், பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் அரசின் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் குறித்து வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வில், சென்னை மாவட்டம் முழுவதும் 331 பள்ளிகள் தடையில்லா சான்று மற்றும் அரசின் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - இதனைத்தொடர்ந்து, இந்தப் பள்ளிகள் தொடர்ந்து அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், இந்தப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாமென பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அங்கீகாரம் இல்லாத பள்ளிகளின் பட்டியலையும் மாவட்ட ஆட்சியர்வெளியிட்டுள்ளார்.