திருச்சியில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் களப்பணிகள் குறித்து ஆலோசனை
Jun 18 2019 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உள்ளாட்சி தேர்தலில் களப்பணியாற்றுவது குறித்து, திருச்சியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட பொன்மலை மற்றும் தில்லைநகர் பகுதிக் கழக மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் கழகப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மாவட்டக் கழக செயலாளர் திரு. ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவது குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டக் கழக, பகுதிக் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றிருந்தனர். (திருச்சி)