சென்னை எண்ணூரில் ரவுடிகளுக்கு இடையே மோதல் : தடுக்க சென்றவர் மீது துப்பாக்கி சூடு
Jun 19 2019 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையை அடுத்த எண்ணூரில் ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க சென்ற கூலித் தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் அருகே கடந்த 7-ம் தேதி இரவு ரவுடிகளான அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க சென்ற செந்தில்குமார் என்ற கொத்தனாரை அலக்சாண்டர் துப்பாக்கியால் சுட்டபோது தோட்டா அவரது இடுப்பு கீழ் பகுதியில் பாய்ந்துள்ளது. ஆனால் அதனை சிறிய காயம் என எண்ணியநிலையில், 2 வாரம் கழித்து குண்டடிபட்ட இடத்தில் வலி ஏற்பட்டதையடுத்து அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குண்டு உள்ளே இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்த போலீசார் எப்படி சூப்பாக்கி சூடு நடந்தது என செந்தில் குமாரிடம் விசாரித்துள்ளனர். விசாரணையில் அலெக்சாண்டர் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் அலெக்ஸாண்டரையும் ரமேஷ்பாபு ஆகிய இருவரையும் எண்ணூர் போலீசார் கைது செய்தனர். செந்தில்குமார் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.