எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பற்றாக்குறை : தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து மக்கள் போராட்டம்

Jun 20 2019 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பற்றாக்‍குறை நிலவி வருகிறது. தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைக்‍கு தீர்வு காணாத அரசு அதிகாரிகளைக்‍ கண்டித்து, பொதுமக்‍கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநகர் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகர்ப்புறங்களில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. மதுரை தெற்கு தொகுதியில் புது மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், பாலரங்கராபுரம், மருதுபாண்டியர் நகர், மல்லிகை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாகவே சீராக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. தனியார் லாரிகளில் வழங்கப்படும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் கேட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அலுவலகத்தை பொதுமக்‍கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மேட்டுபட்டி பகுதியில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி இல்லாமல் தவித்து வரும் மக்‍கள் மாநகராட்சி அலுவலகத்தில் பலமுறை ​புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்‍கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் பகுதிக்‍கு அடிப்படை வசதி செய்து தரகோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்‍கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00