விவசாய நிலங்களை அழிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்குள் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு : மத்திய, மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Jun 20 2019 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தை அழிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டு வழி சாலை, கூடங்குளம் அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ உள்ளிட்ட விவசாய நிலங்களை அழிக்கும் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்குள் கொண்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. முஸ்தாக் பாஷா, விவசாயத்தை அழிக்கும் நோக்கில் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.