மதுரையில் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா வைத்தவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி : அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Jun 20 2019 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் குடியிருப்பு பகுதியில் சிசிடிவி கேமரா வைத்தவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயன்ற இளைஞர்களின் அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கரும்பாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை, திருட்டு போன்ற சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதனை தடுக்கும் வகையில் அதே பகுதியை சேர்ந்த திரு. சந்துரு என்ற இளைஞர் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து குடியிருப்பு வளாகங்களை சுற்றி 14 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை அமைத்துள்ளார். அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த சிலர், சிசிடிவி கேமிராக்களை பார்த்து ஆத்திரமடைந்து கடுமையாக தாக்கினர். மேலும் கட்டை, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தெருக்களில் ஊர்வலமாக வந்து ஒவ்வொரு வீடாக சென்று கடுமையான வார்த்தைகளால் திட்டியதோடு ஆயுதங்களை கொண்டு மிரட்டியுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குவைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.