ராஜ ராஜசோழன் குறித்து சர்ச்சைக்‍குரிய வகையில் பேசிய விவகாரம் - முன்ஜாமின்கோரி தொடரப்பட்ட வழக்‍கில் பா.ரஞ்சித்தை வரும் 21ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை தடை

Jun 19 2019 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக முன்ஜாமின் கோரி இயக்குநர் பா. ரஞ்சித் தொடர்ந்த வழக்கை, வரும் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இயக்குனர் பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் முன் ஜாமின் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். திருப்பனந்தாளில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பா. ரஞ்சித்தை கைது செய்ய மாட்டோம் என அரசுத் தரப்பில் ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி, முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சில திருத்தங்கள் இருப்பதால், அதனை சரிசெய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஜுன் 21-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை பா. ரஞ்சித்தை கைது செய்யக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00