வரும் 28ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது - பேரவை செயலாளர் அறிவிப்பு
Jun 21 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் திரு. சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்ற பேரவை வரும் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கூடும் என அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.