தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுப்பு - நடிகர் பாக்யராஜ் அணி தகவல்
Jun 21 2019 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் தலையிட ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக பாக்யராஜ் அணியினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழத்தொடங்கின. இந்த நிலையில், தேர்தல் நடைபெறுவதாக இருந்த எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித்தை, பாண்டவர் அணியின் சார்பில், நடிகர் விஷால் நேற்று சந்தித்தார். இதையடுத்து, சுவாமி சங்கரதாஸ் அணியைச் சேர்ந்த பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஐசரி கணேஷ், தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை தாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு நடிகர் விஷாலே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.