தமிழகத்தில் குடிநீருக்கு ஆளாய் பறக்கும் மக்கள் - சத்துணவு சாப்பிட்டு கைகளை கூட கழுவ முடியாமல் தவிக்கும் பள்ளி சிறார்கள்
Jun 21 2019 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் முற்றியுள்ள நிலையில், அரசுப் பள்ளி மாணவர்கள் சத்துணவினை பெற்றுக்கொண்டு தண்ணீருக்காக வீதிகளில் தட்டுகளை ஏந்தியபடி வீட்டுக்குச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கழிவறைகள் மூடப்பட்டுள்ளன. தூத்துக்குடி தங்கம்மாள்புரம் அரசுப் பள்ளியில் கழிவறைகள் ஏறகனவே மூடப்பட்டுள்ளன. தண்ணீர் இல்லாததால் மதியம் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவினை பெற்று கொள்ளும் மாணவர்கள், பள்ளியில் வைத்து உணவருந்த முடியாமல் சாலைகளில் சாப்பாடு தட்டுகளை ஏந்தியபடி வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.