கெயில் பணியின்போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குடிநீர் குழாய் உடைப்பு : 2 நாட்களாக தண்ணீர் வீணாகும் அவலம் - கெயில் பணியை தடை செய்ய மக்கள் கோரிக்கை
Jun 21 2019 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சரி செய்யப்படாததால் தண்ணீர் வீணாகி வருகிறது. கெயில் குழாய் புதைக்கும் பணியின் போது ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சீர்காழி அருகே நாங்கூர் பகுதியில் கெயில் குழாய் புதைக்கும் போது கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாய் உடைந்து இரண்டு நாட்காளக தண்ணீர் வெளியேறி குளம் போல் தேங்கி உள்ளது. உடைந்த குழாயை சரி செய்ய கெயில் நிறுவனத்தினர் இதுவரை நடவடிக்கை எடுக்ககவில்லை. கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்ததால், நாங்கூர், சித்தன்காத்திருப்பு , திருவெண்காடு மங்கைமடம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குடிதண்ணீர் இல்லாமல் இரண்டு நாட்களாக தவித்து வருகின்றனர். உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கெயில் குழாய் புதைக்கும் பணியை தடைசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.