தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக் கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்
Jun 21 2019 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக மக்கள் தண்ணீரின்றி தவித்து வரும் நிலையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் இல்லங்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருப்பதை வீடியோ காட்சிகளை ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும், அத்தொலைக்காட்சி நெறியாளர் தொலைபேசி மூலம் ஓபிஎஸ் மகனும், எம்பியுமான திரு. ரவீந்திரநாத்திடம், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் சூழல் குறித்து கேள்வி எழுப்பியபோது, தனக்கு எதுவும் தெரியாது என பேசியது கேலிக்கூத்தாக உள்ளது என அத்தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.