காஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது

Jun 21 2019 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் அருகே திருநங்கைகள் கடத்தப்பட்ட வழக்‍கில் 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலைப்பகுதியில் திருநங்கை குடியிருப்பு உள்ளது. அதில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். குன்றத்தூர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 6 திருநங்கைகள் இந்த பகுதிக்கு அடைக்கலம் கேட்டு வந்தனர். இந்நிலையில், திருநங்கைகளை கடத்துவதற்கு, குன்றத்தூரை சேர்ந்த திருநங்கைகள், ரவுடிகள் மற்றும் ஆயுதங்களுடன் வந்து 6 திருநங்கைகளை கார் மற்றும் ஆட்டோக்களில் கடத்திச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மாகரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குன்றத்தூரை சேர்ந்த திருநங்கை மகா என்கிற மகாலட்சுமி, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, வடிவு, சுப்ரியா, லட்சுமி, ஹரிணி உள்ளிட்ட 5 திருநங்கைகள் மற்றும் கடத்தலுக்‍கு உதவியாக இருந்த ரமேஷ், கார்த்திக், செல்வம், சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்‍கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள், ஒரு ஆட்டோ மற்றும் பட்டா கத்திகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00