சென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்
Jun 21 2019 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மனநோய் அறிகுறிகள், அதற்கு உண்டான உளவியல் பயிற்சியுடன் கூடிய மருத்துவ சிகிச்சை முறை குறித்த 2 நாள் தேசிய கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.
சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், மனநோய் சிகிச்சை தொடர்பான 2 நாள் தேசிய கருத்தரங்கு இன்று தொடங்கியது. காய்ச்சலில் பல வகை உள்ளதுபோல், மனநோயிலும் பல வகை உள்ளது. இதற்கு என்னென்ன சிகிச்சை முறை என்பது குறித்து, சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு 2 நாள் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.