நாடுமுழுவதும் கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சி - பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Jun 27 2019 3:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடுமுழுவதும் கல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எல்லா வகையிலும் இந்தியைத் திணித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் இந்தியைக் கட்டாயமாக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழக மானியக்குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பன்முகத்தன்மையை அழிப்பதற்கான இத்தகைய முயற்சிகள் எந்தக் காலத்திலும் வெற்றி பெற்றதில்லை என்கிற வரலாற்று உண்மையை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்றும் திரு.டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.