குடிநீர் தட்டுப்பாடு - உப்பளத் தொழிலாளர்கள் பாதிப்பு- 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம்
Jun 27 2019 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்கள் அதிகம் வாழும் சத்யா நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அங்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வழங்குவதற்காக போடப்பட்ட குடிநீர் இணைப்பு குழாயும் பழுதாகி விட்டது. இதனால் குளிப்பது, துணி துவைப்பது போன்ற அன்றாட தேவைகளுக்கு மக்கள் உப்பு நீரையும் விலை கொடுத்து வாங்கும் அவலம் நீடித்து வருகின்றது. எனவே அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.