மதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய கிராமம் : சிரமத்திற்கு ஆளாகும் முதியவர்கள், குழந்தைகள் - நடவடிக்கை எடுக்கக் கோரி கையில் விளக்குடன் மனு
Jul 8 2019 5:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டத்தில் 50 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி இருளில் மூழ்கி கிடக்கும் நிலையில், கையில் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் கிராமமக்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சோழவந்தான் அருகே, நகரி மற்றும் கடச்சனேந்தல் பகுதிகளில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, கிராமமே இருளில் மூழ்கியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மண்ணெண்ணெய் விளக்கிலேயே படித்து வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் இருட்டில் படுத்துறங்கும் நிலையில், தேள், பாம்பு, விஷவண்டுகள் உள்ளிட்டவைகள் கடித்து பாதிப்புக்கு உள்ளாவதோடு, சிலர் உயிரிழந்த அவலநிலையும் தொடர்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கையில் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் கிராமமக்கள், ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.